அம்பாரை

புதன்கிழமை, மார்ச் 24, 2010
அமைச்சர் பேரியல் அஷ்ரபின் ஆதரவாளர் ஒருவர் அம்பாறையில் சோதனை சாவடிக்கு அருகில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 7, 2010
அம்பாறை மாவட்டத்தில்; தமிழ் மக்களை அதிகளவில் கொண்ட பிரதேசங்களில் கருணாவின் விசுவாசியும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதி ஐ.ம.சு கட்சி என்ற பெயரில் அலுவலங்களை திறந்து அதன்மூலம் மக்களுக்கு தொடர்ந்தும்அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதக அம்பாறை மாவட்ட செய்திகள் கூறுகின்றன.
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2010
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் பொன்சேகாவுடன் தாம் எவ்வித உடன்படிக்கைகளையும் செய்துகொள்ளவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2009
அம்பாறை, திருக்கோவில் வக்காலைப் பகுதியில் நேற்றுமாலை 6.15 மணியளவில் வான் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு மட்டகளப்பில் இருந்து அம்பாரை வந்துகொண்டிருந்த வான் ஒன்றிலேயே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
புதன்கிழமை, டிசம்பர் 16, 2009
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை சுமார் 50,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நிவாரணங்களை அந்தந்தப் பிரதேச செயலக அதிகாரிகள் வழங்கிவருவதாக அம்பாரை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ எஸ் எம் ஸியாத் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 2009
காணியினை அபகரிக்கும் நோக்கிலும்,தமிழ் பாடசாலையினை அகற்றும் நோக்கிலும்  ,அம்பாறை தமிழ் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடங்கள் சிங்கள ஆசிரியர் ஒருவரால் கட்டம் கட்டமாக உடைக்கப்பட்டு வருகின்றன. இதனை பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2009
வன்னியிலிருந்து இடம்பெயார்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்த வன்னி மக்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் அம்பாறை மாவட்டத்திற்கும் அனுப்பப்பட்டனர். அம்பாறைக்கு அனுப்பப்பட்டவர்களை இது வரையில் உறவினர்களிடம் கையளிக்கவில்லை. அவர்களை அக்கரைப்பற்றில் பொத்துவில் வீதியில் உள்ள இராணுவ முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 11, 2009

அம்பாறையில் புதிதாக மருத்துவ பட்ட படிப்பிற்கு முதல் நிலை புள்ளி ( சீரோ ஸ்கோர்) எடுத்த மாணவர்கள் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந்த புள்ளி திட்டத்தின் கீழ் நாட்டில் எந்த பல்கலை கழகத்திலும் தமது படிப்பினை தொடர முடியும்.

வியாழக்கிழமை, யூலை 23, 2009

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தசட்டத்தின்படி காணி நிர்வாகம் அந்தந்த மாகாணசபைக்குரியதாகும். இத் திருத்தச்சட்டம் முற்றாக இன்னமும் அமுலில் இல்லாத நிலையில் மாகாண அமைச்சின் அனுமதி இன்றி மத்தியஅரசு தனியாருக்கு காணிகளை பகிர்ந்து அளிப்பதானது தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்

புதன்கிழமை, யூலை 22, 2009

தென் தமிழீழத்தில் இருந்து  வெளியிடங்களுக்குச் செல்லும் கொழும்பு உட்பட தென்பகுதிக்கு வாகனங்களில் வெடிப் பொருட்களும் ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுகின்றன எனக்கூறி வாகன பாஸ் நடை முறை 2006 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது.

Syndicate content